சும்மா சொல்லகூடாது...நிர்பயா வந்தபிறகு சமையல் கொஞ்சம் சீக்ரமாகத்தான் ஆயிற்று...மனைவிக்கு ‘சீரியல்’ பார்க்க எக்ஸ்ட்ரா டையமும் கிடைத்தது....சமையல் அறை மேடையில் ‘நாடு நாயகியாக’...நிர்பயா இருந்தது....மனைவி அதை ஏதோ செல்ல பிராணி மாதிரி தினமும் ஒழுங்காக கிளீன் பண்ணி துடைத்து பத்திரமாக வைத்துக்கொண்டாள்....இடுப்பில் தூக்கிவைத்துக்கொண்டு கொஞ்சதது ஒன்றுதான் குறை..
ஆனால் இந்த ‘’நிர்பயா..பந்தம்”...அதிக நாள் நீடிக்கவில்லை....ஸ்டவ் வந்த நேரமோ அல்லது எங்கள் அதிர்ஷ்டமோ தெரியவில்லை..அடுத்த இரண்டாவது வாரமே..தேவ் கேஸ் ஏஜன்சியிடமிருந்து லெட்டர் வந்தது....இரண்டு வருஷத்துக்கு முன் புக் பண்ணியிருந்த கேஸ் கனக்ஷன் அலாட் ஆகி உடனடியாக வந்து பணம் கட்டி வாங்கிக் கொள்ளுமாறு எழுதியிருந்தது...அன்று சனிக்கிழமையாய் இருந்த்ததால் மத்யானமே நேராக ஆபிசிலிருது போய் பணம் கட்டி ஒரு புத்தம் புது எவர்சில்வர் மூணு பர்னர் ஸ்டவ். ரெகுலேடர்..இதர உபகரணங்கள் எல்லாவற்றையும் வாங்கிகொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.. அடுத்த ஒரு மணி நேரத்தில் கேஸ் கம்பனி மெக்கானிக் ஒரு கேஸ் சிலிண்டர் கொண்டுவந்து மாட்டி ..எப்படி உபயோகிப்பது என்று விவரித்துவிட்டு போனார்.....பாவம் சமயலறையில் “நாடு நாயகியாக” இருந்த நிர்பயா ஓரம்கட்டபட்டது...
ஏங்க..கொஞ்சம் ரேஷன் ஆபீஸில் விசாரிங்க..ரெண்டு சிலிண்டர் இருந்தால் மண்ணன்னை கிடையாதுன்னு எனக்கு தெரியும்..ஆனால் ஒரு சிலிண்டெருக்கு உண்டா என்று கேளுங்க .. அப்படி இல்லையென்றல் வெளி மார்கட்டில்தான் வாங்கவேண்டும்....எங்கே கிடைக்கும்னு பாருங்க....எதற்கும் ரெண்டாவது சிலிண்டருக்கும் புக் பண்ணிடுங்க.....மனைவியின் “’அபாய சங்கு”..அடி வயிற்றை கலக்கியது....நிர்பயாவுக்கு அலைஞ்சது போறாதுன்னு மண்ணனைக்கு வேறு அலையணும்னு நினச்சவுடன் “பகீர்” என்றது.....திங்ககிழமை சாயந்தரமே..ஓடிப்போய் கேஸ் கம்பனியில் ரெண்டாவது சிலிண்டருக்கும் புக் பண்ணினேன்..நிர்பயாவின் உபயோகம் குறைந்தது...அப்பபோ..விருந்தாளிகள் வந்தபோதும்..கேஸ் திர்ந்து அடுத்த சிலிண்டர் வருவரைக்கும் மட்டுமே உபயோகப்பட்டது...ஆனாலும் மனைவி அதை ஒழுங்காக பராமரித்து வந்தாள்..
நிர்பயாவின் துரதிர்ஷ்டம் மேலும் அதை துரத்தியது...அடுத்த மூன்றாவது மாசமே ரெண்டாவது சிலிண்டரும் வந்து சேர்ந்தது..நிர்பயாவின் உபயோகம் முற்றிலும் நின்று போயிற்று.. ஒரு நாலு நாள் கழித்து சமையலறையின் மேடைமேல் பார்த்தபோது நிர்பயாவை காணவில்லை…எங்கே என்று கேட்டபோது..மனைவி பதில் சொல்லாமல் ஒரு விரலை மேல் நோக்கி காட்டினாள்.....பரண் மேல் நிர்பயா பல்ளித்துகொண்டு உட்கார்ந்திருது ....ஒருவாரம் கழித்து நிர்பயாவை அங்கே காணவில்லை...என்ன ஆச்சு என்றேன் மனைவியிடம்...
‘ஓ’...அதுவா...பரணில் சும்மா போட்டு வட்சிருந்தால்....துருப்பிடித்து நாசமாய் போய்விடும்னு..நான்தான் நம்ம வீட்டு வேலைக்காரிக்கு கொடுத்துவிட்டேன்...நமக்கு அது உபயோகம் இல்லை....அவளுக்காவது உபயோகம் ஆகட்ட்ம்னுதான்..என்றள்...அதுவும் சரிதான்...நமக்கு உபயோகம் இல்லாட்டி...அடுத்தவர்களுக்கு உபயோகம் ஆனால் சரிதான்னு..பூம்..பூம்..மாடு மாதிரி தலையை ஆட்டினேன்...
இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு சிறு ஆதங்கம்..ஒரு சிறு வருத்தம்....நாயா..பேயா..அலைஞ்சு கொண்டுவந்த “நிர்பயா”..வீட்டைவிட்டு ஒடிப்போய்டுசேன்னு...
என்ன செய்வது...காலத்தின் கட்டாயம் அப்படி.....
Tvk
ஆனால் இந்த ‘’நிர்பயா..பந்தம்”...அதிக நாள் நீடிக்கவில்லை....ஸ்டவ் வந்த நேரமோ அல்லது எங்கள் அதிர்ஷ்டமோ தெரியவில்லை..அடுத்த இரண்டாவது வாரமே..தேவ் கேஸ் ஏஜன்சியிடமிருந்து லெட்டர் வந்தது....இரண்டு வருஷத்துக்கு முன் புக் பண்ணியிருந்த கேஸ் கனக்ஷன் அலாட் ஆகி உடனடியாக வந்து பணம் கட்டி வாங்கிக் கொள்ளுமாறு எழுதியிருந்தது...அன்று சனிக்கிழமையாய் இருந்த்ததால் மத்யானமே நேராக ஆபிசிலிருது போய் பணம் கட்டி ஒரு புத்தம் புது எவர்சில்வர் மூணு பர்னர் ஸ்டவ். ரெகுலேடர்..இதர உபகரணங்கள் எல்லாவற்றையும் வாங்கிகொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.. அடுத்த ஒரு மணி நேரத்தில் கேஸ் கம்பனி மெக்கானிக் ஒரு கேஸ் சிலிண்டர் கொண்டுவந்து மாட்டி ..எப்படி உபயோகிப்பது என்று விவரித்துவிட்டு போனார்.....பாவம் சமயலறையில் “நாடு நாயகியாக” இருந்த நிர்பயா ஓரம்கட்டபட்டது...
ஏங்க..கொஞ்சம் ரேஷன் ஆபீஸில் விசாரிங்க..ரெண்டு சிலிண்டர் இருந்தால் மண்ணன்னை கிடையாதுன்னு எனக்கு தெரியும்..ஆனால் ஒரு சிலிண்டெருக்கு உண்டா என்று கேளுங்க .. அப்படி இல்லையென்றல் வெளி மார்கட்டில்தான் வாங்கவேண்டும்....எங்கே கிடைக்கும்னு பாருங்க....எதற்கும் ரெண்டாவது சிலிண்டருக்கும் புக் பண்ணிடுங்க.....மனைவியின் “’அபாய சங்கு”..அடி வயிற்றை கலக்கியது....நிர்பயாவுக்கு அலைஞ்சது போறாதுன்னு மண்ணனைக்கு வேறு அலையணும்னு நினச்சவுடன் “பகீர்” என்றது.....திங்ககிழமை சாயந்தரமே..ஓடிப்போய் கேஸ் கம்பனியில் ரெண்டாவது சிலிண்டருக்கும் புக் பண்ணினேன்..நிர்பயாவின் உபயோகம் குறைந்தது...அப்பபோ..விருந்தாளிகள் வந்தபோதும்..கேஸ் திர்ந்து அடுத்த சிலிண்டர் வருவரைக்கும் மட்டுமே உபயோகப்பட்டது...ஆனாலும் மனைவி அதை ஒழுங்காக பராமரித்து வந்தாள்..
நிர்பயாவின் துரதிர்ஷ்டம் மேலும் அதை துரத்தியது...அடுத்த மூன்றாவது மாசமே ரெண்டாவது சிலிண்டரும் வந்து சேர்ந்தது..நிர்பயாவின் உபயோகம் முற்றிலும் நின்று போயிற்று.. ஒரு நாலு நாள் கழித்து சமையலறையின் மேடைமேல் பார்த்தபோது நிர்பயாவை காணவில்லை…எங்கே என்று கேட்டபோது..மனைவி பதில் சொல்லாமல் ஒரு விரலை மேல் நோக்கி காட்டினாள்.....பரண் மேல் நிர்பயா பல்ளித்துகொண்டு உட்கார்ந்திருது ....ஒருவாரம் கழித்து நிர்பயாவை அங்கே காணவில்லை...என்ன ஆச்சு என்றேன் மனைவியிடம்...
‘ஓ’...அதுவா...பரணில் சும்மா போட்டு வட்சிருந்தால்....துருப்பிடித்து நாசமாய் போய்விடும்னு..நான்தான் நம்ம வீட்டு வேலைக்காரிக்கு கொடுத்துவிட்டேன்...நமக்கு அது உபயோகம் இல்லை....அவளுக்காவது உபயோகம் ஆகட்ட்ம்னுதான்..என்றள்...அதுவும் சரிதான்...நமக்கு உபயோகம் இல்லாட்டி...அடுத்தவர்களுக்கு உபயோகம் ஆனால் சரிதான்னு..பூம்..பூம்..மாடு மாதிரி தலையை ஆட்டினேன்...
இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு சிறு ஆதங்கம்..ஒரு சிறு வருத்தம்....நாயா..பேயா..அலைஞ்சு கொண்டுவந்த “நிர்பயா”..வீட்டைவிட்டு ஒடிப்போய்டுசேன்னு...
என்ன செய்வது...காலத்தின் கட்டாயம் அப்படி.....
Tvk