மடிசார், பஞ்சகச்சம்
மடிசார், பஞ்சகச்சம்
(This Q&A is taken from the FAQ section from the Tamil book 'VEDAMUM PANPAADUM'. This book has hundreds of such
FAQs in this book in addition to several exclusive chapters on Vedas, Maharishis, Rituals and many more.)
கேள்வி :
மடிசார், பஞ்சகச்சம் போன்ற விசேஷ உடைகளை பற்றி சற்று விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்?
பதில் :
உங்கள் கேள்விலேயே உங்களை அறியாமல் ஒரு தவறு நுழைந்துள்ளது. மடிசார், பஞ்சகச்சம் போன்றவைகள் விசேஷ உடைகள் அல்ல. அவை நாம் நித்யம் அணிய வேண்டியவைதாம். என்ன செய்ய, காலத்தின் கோலம், எவையெல்லாம் சர்வ சாதாரணமாக இருந்ததோ, அவையெல்லாம் இன்று முக்கிய விசேஷங்களில் சம்பந்தப்பட்டவைகளாகி விட்டன. சரி, உங்களது கேள்விக்கு வருவோம். விசேஷ தினங்களிலாவது இவற்றை அணிந்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் கர்மாக்கள் நஷ்டமாகும். மேலும் இவற்றை அணிவதொன்றும் பெரிய பிரம்மவித்தை அல்ல. அப்யாஸம் செய்தால் சுலபமாகப் பழக்கமாகி விடும். மற்றொன்றையும் இந்த சமயத்தில் எடுத்துக்கூற விரும்புகிறேன். இன்று சுடிதார், பேண்ட் போன்றவைகள் பழக்கத்திற்கு வந்துவிட்டன. சமுதாயமும் இதை ஏற்றுக் கொண்டு விட்டது. அவை இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் குறைந்தது கோவில்களுக்கும், வேத பாராயணம் நடக்கும் இடங்களுக்கும், ஆச்சார்ய ஸ்வாமிகள் போன்ற மஹான்களை தரிசிக்கச் செல்லும் பொழுதாவது, இவற்றைத் தவிர்த்து, புடவை வேஷ்டியில் செல்வது உசிதம்.
(This Q&A is taken from the FAQ section from the Tamil book 'VEDAMUM PANPAADUM'. This book has hundreds of such
FAQs in this book in addition to several exclusive chapters on Vedas, Maharishis, Rituals and many more.)
கேள்வி :
மடிசார், பஞ்சகச்சம் போன்ற விசேஷ உடைகளை பற்றி சற்று விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்?
பதில் :
உங்கள் கேள்விலேயே உங்களை அறியாமல் ஒரு தவறு நுழைந்துள்ளது. மடிசார், பஞ்சகச்சம் போன்றவைகள் விசேஷ உடைகள் அல்ல. அவை நாம் நித்யம் அணிய வேண்டியவைதாம். என்ன செய்ய, காலத்தின் கோலம், எவையெல்லாம் சர்வ சாதாரணமாக இருந்ததோ, அவையெல்லாம் இன்று முக்கிய விசேஷங்களில் சம்பந்தப்பட்டவைகளாகி விட்டன. சரி, உங்களது கேள்விக்கு வருவோம். விசேஷ தினங்களிலாவது இவற்றை அணிந்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் கர்மாக்கள் நஷ்டமாகும். மேலும் இவற்றை அணிவதொன்றும் பெரிய பிரம்மவித்தை அல்ல. அப்யாஸம் செய்தால் சுலபமாகப் பழக்கமாகி விடும். மற்றொன்றையும் இந்த சமயத்தில் எடுத்துக்கூற விரும்புகிறேன். இன்று சுடிதார், பேண்ட் போன்றவைகள் பழக்கத்திற்கு வந்துவிட்டன. சமுதாயமும் இதை ஏற்றுக் கொண்டு விட்டது. அவை இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் குறைந்தது கோவில்களுக்கும், வேத பாராயணம் நடக்கும் இடங்களுக்கும், ஆச்சார்ய ஸ்வாமிகள் போன்ற மஹான்களை தரிசிக்கச் செல்லும் பொழுதாவது, இவற்றைத் தவிர்த்து, புடவை வேஷ்டியில் செல்வது உசிதம்.