• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தீபாவளி ரகசியங்கள்

Status
Not open for further replies.
தீபாவளி ரகசியங்கள்

Diwali_fireworks_.jpg


(The Englsih version of this article is already posted under Science Behind Deepavali in two parts. This is just a summary in Tamil: swami)

Pictures are taken from The Hindu and other websites. Thanks.

தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம்? பலரும் கீழ்கண்ட காரணங்களைக் காட்டுவர். முதலில் அதைப் படித்துவிட்டு நான் கூறும் புதிய விஷயங்களையும் படியுங்கள்:

1.கிருஷ்ண பரமாத்மா, நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற நாளை நினைவுபடுத்தி தீபாவளையைக் கொண்டாடுகிறோம்.

2.தீபம் என்றால் ஒளி விளக்கு, ஆவளி என்றால் வரிசை. தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்துக் கொண்டாடுவதால் தீபாவளி.

3.தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது லெட்சுமி தேவி வெளிவந்த நாள் இது.

4.ராமபிரான், ராவணனைக் கொன்று சீதையை மீட்டு அயோத்திக்குத் திரும்பிய நாள் இது.

5.பாண்டவர்கள் 12 ஆண்டு வனவாசத்தை முடித்த நாள் இது.

6.சமண தீர்த்தங்கரில் ஒருவரான வர்த்தமான மஹாவீரர் நிர்வாணம் எய்திய நாள். ஆகையால் சமணர்களுக்கும் புனித நாள் இது.

7.சீக்கியர்களின் பொற்கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள் இது. அனைவரும் குருவின் ஆசிர்வாதம் பெற வருமாறு குரு அமர்தாஸ் அறைகூவல் விடுத்த நாள் இது. ஆகையால் சீக்கியர்களுக்கும் புனித நாள்.

8.ஆர்ய சமாஜ ஸ்தாபகர் சுவாமி தயானந்த சரஸ்வதி சமாதி எய்திய நாள் இது.

9. இந்து மன்னர்களில் மிகவும் புகழ்பெற்ற விக்ரமாதித்தன் சிம்மாசனம் ஏறிய நாள் இது.

10.குஜராத்திகளுக்கும் வணிக சமூகத்தினருக்கும் புத்தாண்டும் புதுக் கணக்கு துவங்கும் நாளும் இது.


11. லெட்சுமி பூஜை குபேர பூஜை நடக்கும் நாள் இது.

இவ்வாறு பல காரணங்கள் கூறுகின்றனர். இவை அனைத்திலும் ஒரு உண்மை புலப்படும். இந்த எல்லா காரியங்களும் வெற்றி பெற ஒவ்வொருவரும் கடின உழைப்பைச் செய்தனர். ராமர் 14 ஆண்டுகளும் பாண்டவர்கள் 12+1 ஆண்டுகளும் வனவாசம் செய்த பின்னரே வெற்றி கிட்டியது. கடின உழைப்பின் மூலமே இருள் அகன்று ஒளி தோன்றும் என்பதே தீபாவளியின் கருத்து.


fire+crackers.jpg



மத்தாப்பு, வெடி, சொக்கப் பனையின் காரணம்
தீபாவளி என்றால் வெடி மத்தாப்பு கொளுத்துகிறோம். ஏன்? சமூகவியல் அறிஞர்கள் இதற்குக் கூறும் காரணம்: பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆதி மனிதர்கள் குகையில் வாழ்ந்தபோது உணவு சமைக்கவும் மிருகங்களை அச்சுறுத்தி விரட்டவும், குளிர்காயவும் தீயே உதவியது. அது இன்னும் நமது மரபு அணுவில் இருக்கிறது. ஆகையால் தீ வைப்பதில் சிறுவர்களுக்கு எப்போதுமே ஆர்வம் இருக்கும். இதை ‘பைரோமேனியா’ என்று அழைப்பர். இதைக் கட்டுபடுத்தாவிடில் கடை அடைப்பு, ஹர்த்தால், பந்த் போன்றவற்றில் இளஞர்கள் ஈடுபட்டு பொதுச் சொத்துகளுக்கு தீவைப்பர். ஆகவே கட்டுக் கடங்காத இளைஞர்களின் அபார சக்தியை வழிப்படுத்தவே முறையாக சொக்கப் பனை கொளுத்தல், வெடி வெடித்தல் ஆகியவற்றை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினர்.

உலகம் முழுதும் நவம்பர் மாதத்தில் சொக்கப் பனை கொளுத்தும் வழக்கம் உண்டு. பிரிட்டனில் தீபாவளியை ஒட்டி ‘கை பாக்ஸ் டே’ என்று கொண்டாடுவார்கள். அப்போது சொக்கப்பனை, வாணவேடிக்கை உண்டு.

மேலும் நவம்பர் மாததில் பயிர்களை அழிக்கும் பூச்சிகள் பெருகும். சொக்கப்பனை, லட்சக் கணக்கில் தீபம் ஏற்றுதல் ஆகியன இப்பூச்சிகளை அழிக்க உதவும். பூச்சிகள் தாமாகவே ஒளியை நாடி தீயில் விழுந்து மாய்த்துக் கொள்ளும். ஆக உலகம் முழுதும் சொக்கப்பனை உண்டு.
அக்கினியின் பெருமையை அறிந்தே உலகின் மிகப் பழைய மத நூலான ரிக் வேதத்தை அக்னி (தீ) என்ற சொல்லில் துவங்கி அக்னி பகவான் பற்றிய பாடலுடன் முடிக்கின்றனர்.
இந்துக்களின் முக்கியப் பண்டிகைகள் முழு நிலவு நாளிலேயே வரும். தீபாவளி மட்டும், அமாவாசைக்கு முதல் நாள் துவங்கி 4 நாட்கள் நடப்பதால் விளக்கு ஏற்றுவதிலும் பொருள் இருக்கிறது. அதிலும் கூட மருத்துவ பயன் உடைய எண்ணெய்களையே பயன்படுத்துவர்.


கிறிஸ்துமஸ் மரம்
முன்காலத்தில் சாலைகளில் உள்ள மரங்களில் விளக்கு ஏற்றிவைத்து தீபாவளி கொண்டாடியதை கந்தபுராணம் விளக்குகிறது.. இதை மேல் நாட்டினர் இன்றும் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்துமஸ் காலத்தில் மரங்களை நட்டு அதில் விளக்கு ஏற்றுகின்றனர்.
பழைய கால தீபாவளி நான்கு நாட்களுக்குக் கொண்டாடப்பட்டது. சகோதரிகளுக்கு சகோதரர்கள் பரிசு கொடுக்கும் நாளாகவும், மஹாபலியை நினைவுபடுத்தும் நாளாகவும் எமதர்மராஜனைக் கொண்டாடும் நாளாகவும் நரக சதுர்த்தியாகவும் கொண்டாடப்பட்டது. இதுபற்றி காளிகாபுராணம், ஸ்கந்தபுராணம் முதலிய நூல்களில் காணலாம். இப்பொழுது கேரளத்தில் ஓணம் கொண்டாட என்ன காரணம் இருந்ததோ அது தீபாவளிக்குக் கொடுக்கப்பட்டது. காலப் போக்கில் தீபாவளி மாறிவிட்டது.


இனிப்புத் திருநாள்
உலகிலேயே அதிகமான, சுவையான உணவு வகைகளையும், திண்பண்டங்களையும் உடைய நாடு இந்தியா. ஒவ்வொரு பண்டிகைக்கும் வெவ்வேறு வகை உணவு. ஒவ்வொரு கடவுளுக்கும் வெவ்வேறு வகை பிரசாதம்! இப்படி வகை வகையான இனிப்புகளை உடைய மதமோ நாடோ உலகில் இல்லை. 150 வகையான இனிப்புகளும், 25 வகை பாயசங்களும் சமையல் புத்தகத்தில் இருக்கின்றன! உலகில் சர்க்கரை நோய் அதிகம் உடைய நாடும் இந்தியாவே. ஆகையால் இனிப்புத் திருநாளில் இனிப்புகளை அளவோடு உண்டு வளமாக வாழ வேண்டும் அளவுக்கு மிஞசினால் அமிர்தமும் விஷமன்றோ.

DEEPAVALI+2007.jpg



தீபாவளியின் பொருளாதரத்தைக் கணக்கிற்கொண்டால் பல கோடிக் கணக்கான மக்களின் தொழிலுக்கும் பிழைப்புக்கும் ஆதாரமாக இருக்கிறது. அவ்வகையிலும் தீபாவளி பலருடைய இல்லங்களில் ஒளி விளக்கை ஏற்றுகிறது. அஞ்ஞான இருள் அகன்று ஞான ஒளி பிறக்கும் நன் னாள் இது. தீமை இருள் அகன்று நன்மை ஒளி பிறக்கும் நாள் இந்த இனிய தீபாவளி நாள். அனைவருக்கும் மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top