Thread: Holy Places
View Single Post
  #10 (permalink)  
Old 02-03-2007, 02:30 PM
MANNAIKOSAI MANNAIKOSAI is offline
Junior Member
 
Join Date: Mar 2007
Posts: 22
Downloads: 0
Uploads: 0
அர்த்த ராத்திரியில் கானா பாட்டு காசட் கடைகளுடன் சகல விதமான உணவுகளும் கிடைக்கும் ரோட்டோரக் கடைகள் என இருக்கும் மாமண்டூரில் பேருந்தில் பயணம் செய்யும் யாவரும் இறங்கியிருப்போம்.
ஆனால் இவ்வூர் ஒரு புனிதத் தலம் என்பது ஆச்சர்யமானது.
மண்டூக மஹரிஷி ஈசனை நோக்கி மிகப்பெரிய தவத்தை இயற்றி மோக்ஷம் பெற்றாராம். அவர் வழிபட்ட சிவன் பெரிய திருக்குளத்தோடு இவ்வூரின் மேற்கே உள்ளது. மா (பெரிய) மண்டூர். இங்கிருக்கும் பிச்சீஸ்வரரை தரிசித்தால் எத்தனை பெரிய துன்பமாய் இருந்தாலும் விலகி விடுமாம்.வழி:- தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு பாலாற்று பாலம் தாண்டி சிறிது தூரத்தில் வலக்கைப் பக்கம் திரும்பும் ஊர் சாலையில் சென்றால் 1/4 கி.மீட்டரில் கோவிலிருக்கிறது. மாணிக்க விநாயகரின் தரிசனம் கொள்ளை அழகு. பூத்துக் குலுங்கும் பல்லாயிரக்கணக்கான தாமரைகளைக் கொண்ட திருக்குளம் மனதை வசீகரிக்கும்.
__________________
__________________
SARVE JANA: SUKHINO BHAVANTHU
Reply With Quote
All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.