Thread: Holy Places
View Single Post
  #9 (permalink)  
Old 02-03-2007, 01:29 PM
MANNAIKOSAI MANNAIKOSAI is offline
Junior Member
 
Join Date: Mar 2007
Posts: 22
Downloads: 0
Uploads: 0
ஏரிக்காத்த ராமர் :_ இந்த பெயரைக் கேட்டாலே நமக்கு மதுராந்தகம் ஞாபகத்திற்கு வரும். ஆனால் இன்னொரு ஏரிக்காத்த ராமர் "திருநின்றவூர்" தலத்தில் இருக்கிறது. கடல் போன்று பரந்து விரிந்து கிடக்கும் ஏரியைக் காக்க இராமபிரான் ஏரியின் கரைகளைக் காத்து காவல் நிற்கிறார். பக்தவத்ஸலப் பெருமாள் கோவிலின் பின்புறம் உள்ள ஏரிக்கரையில் சேவை சாதிக்கிறார். இவரை தரிசித்தபடி தேர் முட்டியில் சிறிய திருவடியாம் அனுமன் கை குவித்து தரிசிக்கிறார்.
தினமும் சில மணிநேரம் மட்டுமே சன்னதி திறந்திருக்கும்.
பூசலார் நாயனார் வாழ்ந்த தலம்.
108 திவ்ய தேசத்தில் 58வது தலம்.
திருநின்றவூர் ரயில் நிலையத்திலிருந்து கோவில் 1-1/2 கி.மீட்டர் தொலைவு.
__________________

பாடகச்சேரி ஸ்வாமி சிவாலயம் - புராதனமான சிவாலயம் லட்சக்கணக்கான மக்கள் சென்று வரும் ப்ரதான சாலையில் சென்னையில் அமைதியாய் இருக்கிறது. அதிலும் குடந்தை பாடகச்சேரி ஸ்வாமிகள் திருப்பணி கண்ட ஆலயம்.
கிண்டி ரயில் நிலையத்திற்கு நுழைபவர்கள் கண்ணில் தவறாமல் படும் ஆலயம் அண்ணா சாலையில் பாலத்திற்கு பக்கவாட்டில் இருக்கிறது. தரிசித்தவர்கள் பாக்கியவான்கள். இக்கோவிலிலிருந்து 50 அடி தூரத்தில் ஷீரடி பாபா மந்திர் இருக்கிறது.
__________________
__________________
SARVE JANA: SUKHINO BHAVANTHU
Reply With Quote
All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.