|
வளத்தொட்டி - பந்தணைநல்லூர் அருகே இந்த ஊரில் யார் குழந்தைவேண்டி வருகிறார்களோ, அவர்களுக்கு இங்கிருக்கும் அம்பிகையின் பேரருளால் நல்ல மகவு கிடைக்கிறது. இத்தலத்தில் பார்வதி தேவியானவள், எம்பிரான் முருகனை தொட்டில் போட்டு தாலாட்டியதால், முருகன் வளர் தொட்டி என பெயர் பெற்ற இத்தலம் தற்காலத்தில் "விளத்தொட்டி" என்று அழைக்கப்படுகிறது.
இவ்வூரில் பிறக்கும் குழந்தைகளுக்கு தொட்டில் போடும் வழக்கம் கிடையாது. யார் வீட்டிலும் தொட்டிலும் கிடையாது.
திருச்சிற்றம்பலம் எனும் தலமும் இதன் அருகே தான் அமைந்திருக்கிறது.
வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து மணல்மேடு வழியாய் குடந்தை போகும் பேருந்தில் மணல்மேட்டிலிருந்து 10 கி.மீட்டர் தூரம்.
குடந்தையிலிருந்து வருகிறவர்களாக இருந்தால் பந்தணைநல்லூரிலிருந்து மணல்மேடு சாலையில் 3 கி.மீட்டர்
__________________
__________________
SARVE JANA: SUKHINO BHAVANTHU
|